காலி, ஹபராதுவ காவல்நிலையத்தினை சேர்ந்த 5 காவல்த்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்த காவல்நிலைய அதிகாரி ஒருவருடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அண்மையில் அந்தகாவல் நிலையத்தின் அதிகாரி ஒருவர் பங்கேற்ற நிகழ்வில் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் தொழில் புரியும் ஒருவரும் பங்கேற்றிருந்தார். அவ்வாறு நிகழ்வில் பங்கேற்ற நபருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் குறித்த காவற்துறை அதிகாரி பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் காவல் நிலையத்தின் 5 அதிகாரிகள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.