சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்- மஹிந்த அமரவீர

அமரவீர 720x380 1
அமரவீர 720x380 1

நாட்டின் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இயற்கை வளங்கள் உள்ளிட்ட சூழலை திட்டமிட்ட வகையில் அழிக்கும் நபர்களை இனங்கண்டு அவர்களைக் கைது செய்யும் விசேட பிரிவொன்றை அமைப்பதற்கு சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இராணுவம் மற்றும் பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் இருவரின் தலைமையில் குறித்த பிரிவு அமைக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அமைப்பானது சூழல் அழிப்பு முன்னெடுக்கப்படும் போது உடனடியாக அதனை சுற்றிவளைக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.