க.பொ.த. உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்ததும் தாம்பாரிய தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுக்க உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது .
இது தொடர்பில் அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளதாவது
நாட்டில் தற்பொழுது பரவி வரும் கொடிய நோயான கொரோனா வைரஸ் காரணமாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தொழிலை முன்னெடுக்க முடியாது கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.
உரிய அதிகாரிகளிடம் எமது கோரிக்கைகளை முன்வைத்தும் எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.
கொரோனா நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தனியார் பேருந்து தொழிலுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த நிவாரணமும் இதுவரை கிடைக்கவில்லை. தனியார் பேருந்து தொழிற்சங்கங்கள் முன்வைத்த திட்டங்களுக்கு அரசாங்கம் முறையான பதில்களையும் அளிக்காமையால் தனியார் பேருந்து தொழில் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.