கண்டியில் துணிக்கடை ஒன்றில் மின்தூக்கி உடைந்து வீழ்ந்ததில் இருவர் பலி!

கண்டியிலுள்ள துணிக்கடை ஒன்றில் தற்காலிக மின்தூக்கி ஒன்று உடைந்து விழுந்ததில் இரு பணியாளர்கள் பலியாகியுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (16) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இரு பணியாளர்களும் சீமெந்து மூடைகள் பலவற்றை மின்தூக்கியில் கொண்டு செல்கையிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்ததாக குறிப்பிடப்படுகிறது.