இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் தீப்பரவலுக்குள்ளான எம் டி நியு டயமன்ட் கப்பலின் தலைவருக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையினை நீக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த கப்பலின் தலைவன் தனக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை நீக்குமாறு கோரி சட்டத்தரணியூடாக தாக்கல் செய்துள்ள மனு கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த பயணத்தடையினை நீக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.