கடந்த 13 ஆம் திகதி ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு அறிவித்தல்!

4 4
4 4

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அனைத்து ஊடகவியலாளர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற அச்சம்  காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஊடகவியலாளர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளாரா? இல்லையா? என்பது தொடர்பில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.