கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவந்த ஒருவர் கைது!

kaithu

பதுளை தெல்பெத்த தோட்டத்தின் கம்பியடியில் நீண்டகாலமாக சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவரை பதுளை குற்றத்தடுப்பு அதிகாரிகளினால் விற்பணை செய்து கொண்டிருந்த சட்டவிரோத கசிப்பு 13 போத்தல்களுடன் இன்று (16) கைதுசெய்துள்ளனர்.

பதுளை தெல்பெத்தை தோட்டத்தில் சட்டவிரோத கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக தெல்பெத்தை தோட்ட மக்களால் பதுளை பொலிசாருக்கு வழங்கிய முறைபாடுகளை அடுத்து பதுளை குற்றத்தடுப்பு அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதல்களின் பின் இன்று தொடர்ந்து கசிப்பு விற்பனை செய்துவந்த பெண் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் சந்தேகநபரை பதுளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பதுளை குற்றத்தடுப்பு பிரின் உதவி அத்தியட்சகர் தெரிவித்தார்.