கிருஷ்ணபுரத்தில் கொரோனா சிகிச்சை நிலையம் !

40corona India 0 0
40corona India 0 0

வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

இதன் அடிப்படையில் கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில்விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமாக இருந்த, தற்போது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணியிலேயே இந்த சிகிச்சை நிலையம் அமைக்கப்படுகிறது.

சுமார் 100 படுக்கைகளைக் கொண்டதாக இந்த சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு வருவதாகவும், இரண்டு வாரங்களுக்குள் இந்தப்பணிகள் நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது.

நாட்டில் தற்பொழுது அதிகரித்து காணப்படும் கொரோனா தொற்றினை அடுத்தே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது

அதேவேளை சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமையயாழ் மாவட்டத்தின் மருதங்கேணி பகுதியிலும் மற்றுமொரு கொரோனா சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .