நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாஅச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தப்பட்டிருந்த 198 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர் .
கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய 53 ஆயிரத்து 395 பேர் இதுவரை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளனர்.
அத்துடன், தற்போது, 86 நிலையங்களில் 9 ஆயிரத்து 415 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.