தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு இன்று சந்தர்ப்பம்

postel vot
postel vot

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றதாக தேர்தல் வன்முறைக் கண்காணிப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பு நடைபெற்ற 4 தினங்களில் 6 சம்பவங்கள் மாத்திரம் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த சம்பவங்கள் தேர்தல் பெறுபேறுகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலான பாரிய சம்பவங்கள் அல்ல என்று தேர்தல் வன்முறைக் கண்காணிப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தபால் மூலம் இதுவரையில் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் இன்றைய (Nov.7) தினம் தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் உண்டு.