நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருமித்து தமது ஆதரவினை தெரிவிக்காது அதன் பங்காளிக்கட்சிகள் ஒவ்வொன்றும் தனித்து தமது ஆதரவினை வெளியிட்டு வருகின்றனர்.
தமிழரசுக்கட்சி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவினை தெரிவித்திருந்த நிலையில் நேற்றைய தினம் கூட்டமைப்பின் மற்றுமொரு பங்காளிக்கட்சி புளொட்டும் சஜித்திற்கு தமது ஆதரவினை அறிவித்திருந்தது.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கமான “ரெலோவின்” ஆதரவு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு என அறிவித்துள்ளது.
வவுனியாவில் கட்சியின் உபதலைவர் பிரசன்னா தலைமையில் நேற்று(Nov.06) இடம்பெற்ற கூட்டத்தில் நீண்ட நேரம் கலந்துரையாடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக எழுத்து மூல அறிவிப்பினுாடாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதில் பலத்த கருத்து நிலைப்பாடுகள் காணப்பட்ட நிலையில் பெரும்பான்மையாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க சம்மதம் தெரிவித்திருந்தனர்.
இதன் காரணமாக அவருக்கு ஆதரவளிப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அறிவித்துள்ளார்.