ஜனாதிபதி தேர்தல் வாக்குகளை எண்ணும் நிலையங்களாக 23 பாடசாலைகளைப் பயன்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
வாக்கெண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளை அமைச்சு அறிவித்துள்ளது.
- கொழும்பு – ரோயல் கல்லூரி | டி.எஸ். கல்லூரி
- கம்பஹா – வித்யாலோக்க வித்தியாலம், வியாங்கொடை
- களுத்துறை – களுத்துறை வடக்கு மியூசியஸ் கல்லூரி
- கண்டி – பொல்கொல்ல மாதிரி பாடசாலை
- மாத்தளை – கிறிஸ்துதேவ கல்லூரி
- நுவரெலியா – காமினி தேசிய பாடசாலை
- காலி – புனித அலோசியஸ் கல்லூரி
- மாத்தறை – சுஜாதா கல்லூரி
- ஹம்பாந்தோட்டை – சுச்சீ தேசிய பாடசாலை
- யாழ்ப்பாணம் – யாழ். மத்திய கல்லூரி
- மட்டக்களப்பு – இந்துக் கல்லூரி
- குருணாகல் – மலியதேவ ஆண்கள் பாடசாலை | சேர் ஜோன் கொத்தலாவல கல்லூரி
- புத்தளம் – புனித அண்ரூ மத்திய மகா வித்தியாலயம் | பாத்திமா பாலிகா கல்லூரி | செயினப் ஆரம்ப பாடசாலை
- அநுராதபுரம் – மத்திய கல்லூரி
- பதுளை – மத்திய மகா வித்தியாலயம் | விசாகா மகளிர் கல்லூரி
- மொனராகலை – ரோயல் கல்லூரி
- கேகாலை – மகளிர் கல்லூரி | ஸ்வர்ண ஜயந்தி மகா வித்தியாலயம்
வாக்களிப்பு நிலையங்கள், வாக்கெண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள், எதிர்வரும் 14 திகதியன்று பாடசாலை நேரத்தின் பின்னர் கிராம உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.