அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் துப்பாக்கி மீட்பு!

அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தின் சாம்பல் திடல் வீதியில் உள்ள தனியார் காணியின் கிணற்றில் இருந்து T-81 வகை துப்பாக்கி, ஒரு ரவைக்கூடு மற்றும் 30 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இப்பொருட்களை மீட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.