மாணவியை மோதித்தள்ளிய கன்டர் ரக வாகனம்!

vipaththu
vipaththu

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிவிட்டு பேருந்திலிருந்து இறங்கிய மாணவியை கண்டர் ரக வாகனம் ஒன்று மோதித்தள்ளியுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் யாழ்.மீசாலை A9 வீதி புத்தூர் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் தலையில் காயமடைந்த மாணவி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் அல்லாரை வடக்கு மீசாலையைச் சேர்ந்த துரைசிங்கம் ருக்சியா (19) என்ற மாணவியே காயமடைந்தவராவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்