கம்பாஹா காவல்துறை பிரிவு ஊடாக செல்லும் வாகனங்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை !

625.500.560.350.160.300.053.800.900.160.90 2 9
625.500.560.350.160.300.053.800.900.160.90 2 9

கண்டி வீதி மற்றும் நீர்கொழும்பு வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கம்பாஹா மாவட்டத்தின் காவல் துறை பிரிவுகள் ஊடாக செல்லும் வாகனங்கள் எந்த இடத்திலும் நிறுத்தப்படக் கூடாது என காவல் துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம் நாளை முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.