தனிமைப்படுத்தல் மையத்தில் 20 பேருக்கு கொரோனா.

202010101937219542 Tamil News Andhra Pradesh 5653 people corona infection in today SECVPF
202010101937219542 Tamil News Andhra Pradesh 5653 people corona infection in today SECVPF

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள  தனிமைப்படுத்தல் நிலையத்தில் கம்பகாவை சேர்ந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசியகல்வியற் கல்லூரி கொவிட்-19 தனிமைப்படுத்தல் நிலையமாக அண்மையில் மாற்றப்பட்டிருந்தது. 


இந்நிலையில் கம்பகா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் என பலர் குறித்த மையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள 324 பேருக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பி. சி.ஆர் பரிசோதனைகள் நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 
இந்நிலையில் 194 பேருக்கான பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றிருந்தது. அதன்படி 20 பேருக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களை யாழ் மருதங்கேணி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்