மஹிந்த ராஜபக்ஷவிற்கும், கொரிய பிரதமருக்கும் இடையில் தொலைபேசி மூல கலந்துரையாடல்

10 1
10 1

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், கொரிய பிரதமருக்கும் இடையில் தொலைபேசி மூலமான கலந்துரையாடலொன்று இன்று (2020.10.20) இடம்பெற்றுள்ளது. 

இதன்போது இருதரப்பு உறவை மேம்படுத்தல், கல்வி, முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இது குறித்து பிரதமர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்,

இன்று காலை தொலைபேசி அழைப்பு எடுத்த கொரிய பிரதமர் சுங்சை-கியுனுக்கு நன்றி கூறுகிறேன். பரஸ்பர நலன்களின் பகுதிகளை மேம்படுத்துவதில் ஒரு உற்பத்தி பரிமாற்றம் இருந்தது. கடல்சார் பல்கலைக்கழகம், முதலீடு மற்றும் சுற்றுலாவுக்கான தொழில்நுட்ப உதவி முன்னுரிமைகள் ஆகியன கலந்துரையாடப்பட்டன. நான் இலங்கைகையை பார்வையிட பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். என தெரிவித்துள்ளார்