நாட்டில் கொரோனா நோய் பரம்பலை கட்டுப்படுத்த அதிகளவில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கொரோனா தொற்று ஒரு பூகோள பரம்பல் தொற்று நோயாகும் . இதன் தொற்று வீதம் சாதாரண தொற்று நோய்களை விட மிகவும் அதிகமாகவுள்ளது இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்த நோயாளிகளை அடையாளப்படுத்தி தனிமைப்படுத்தல் அவசியமானது இதற்கு PCR பரிசோதனை உதவுகின்றது .
நோய் தொற்றினை கண்டறியும் PCR பரிசோதனை வீதத்தை அதிகரித்தால் மாத்திரமே நாட்டில் கொரோனா நோயினை கட்டுப்படுத்த முடியும். இதற்கு நோய் பரவுகின்ற திசையை கண்டறிந்து PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று எண்ணிக்கை 10 மடங்காக அதிகரிக்கும் போது PCR பரிசோதனைகளினை இன்னும் இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் .
அந்த வகையில் இலங்கையில் PCR ஆய்வுகூடங்கள் மேலும் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும் PCR முடிவுகளே தனிமைப்படுத்தல்களை ஏற்படுத்த ,சமூக முடக்கத்தினை ஏற்படுத்த உதவுகின்றது. அதேபோல PCR முடிவுகளின் அடிப்படையிலேயே நோயாளர்களுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது .
ஒரு பிரதேசத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் போது அங்கு ஆய்வுகூட பரிசோதனைகள் கட்டாயமாக இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும்.
எனினும் கொரோனா தொற்று ஏற்படாத வண்ணம் கட்டாயமாக நாம் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் இது பொதுவாக நோய் அறிகுறி இல்லாத சாதாரண மக்களிடமிருந்து கிருமி தொற்றாமல் தடுக்கும் அதே போல் கைகளை கிருமி தொற்று நீக்கிகளை பாவித்து நன்றாக கழுவ வேண்டும் இது கிருமிகளை அழிக்கும் அடுத்ததாக பொது இடங்களில் சமூக இடைவெளி பேணுதல் வேண்டும் மேலும் பொது போக்குவரத்தினை இயன்றவரை தவிர்த்தல் வேண்டும் இதனை தவிர்ப்பதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து எம்மை பாதுகாக்க முடியும் அவசியமற்ற ஒன்று கூடல்களை தவிர்த்தல் வேண்டும், தூர இடங்களுக்கு செல்வதைத் தவிர்ப்பதன் மூலம் பல இடங்களுக்குக் கிருமியை கொண்டு செல்வதை தவிர்க்க முடியும்
இதனை கடை பிடிப்பதன் மூலம் கொரோனா தொற்று ஏற்படுவதைக்குறைக்க முடியும் இவற்றினை விட கொரோனாபரிசோதனையாகிய PCR பரிசோதனையினை இரட்டிப்பாக மேற்கொள்வதன் மூலம் சமூகத்தில் கொரோனா நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம்.
இன்னும் 20 வருடங்களுக்கு இந்த கொரோனா நோய்க்கிருமி எமது சமூகத்தில் காணப்படும் எனவே நாங்கள் பயன்படுத்தும் முககவசங்களை சாதாரண குப்பைகளில் போடுதல் அல்லது தெருக்களில் வீசுதல்தவறானது ஏனெனில் யாழில் மக்கள் தாங்கள் பயன்படுத்திய முககவசங்களினை பசுமாடுகளிற்கோ அல்லது ஏனையகழிவுகளுடன் கொட்டுவதனை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
இந்த முககவசங்களிலிருந்து கிருமி மிருகங்களிற்கு கடத்தப்படலாம் எனவே கொரோனா நோயாளிகள் அல்லது பொதுமக்கள் பாவிக்கின்ற முககவசங்களை பொது இடங்களில்,சாதாரண குப்பைகளோடு போடுவது தவிர்க்கப்பட வேண்டியதாகும் இது சாதாரண மிருகங்களின் மூலம் சமூகத்தில் நீண்ட காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இந்த விடயங்களை மக்கள் கருத்தில் கொள்ளவேண்டும் என பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.