சபாநாயகரை சுட்டிக்காட்டினார் எதிர்க்கட்சி தலைவர்

447777
447777

சுகாதார வழிமுறைகளை பின்பற்றுங்கள் என நாடாளுமன்றத்தில் கூறிக்கொண்டு சபாநாயகரே முகக்கவசம் இல்லாது சபையை வழிநடத்துகின்றார், சபாநாயகர் சபைக்கு தவறான எடுத்துக்காட்டென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டை  முன்வைத்ததுடன், உடனடியாக நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விட்டு சுகாதார வழிமுறைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின்  கோரிக்கைக்கு பதில் தெரிவித்த சபாநாயகர் இரண்டாம் உலக யுத்தத்தில் குண்டு மழைகள்  பொழிந்து கொண்டு இருந்த நேரத்தில் கூட நாடாளுமன்றம் கூடியது, இப்போது எவ்வாறு நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பது என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.