கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தின் 32 ஆவது மாடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஊழியர் கடந்த 8 ஆம்திகதி அலுவலகத்திற்கு வந்துள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நிறுவனத்தின் அலுவலகம் மூடப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்பை பேணிய அனைவரும் பி சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கட்டடம் 42 மாடிகளைக் கொண்டு கொழும்பில் உயர்ந்து விளங்குகின்றது.
மேலும் இதில் பிரபல்யமான ஊடக நிறுவனம், வர்த்தக நிறுவனங்களின் தலைமையகங்கள் என பல நிலையங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.