பூகொடை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

பொல்கஸ்லந்தப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர், போதைப் குற்றச்சாட்டில் கடந்த 11 ஆம் திகதி பூகொடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்படி, குறித்த இளைஞர் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், சுகயீனம் காரணமாக ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்தார்.

இந்த நிலையில், கவல்த்துறையினரால் தாக்கப்பட்டமை காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக, குறித்த இளைஞரின் மனைவி முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்,காவல்துறை பரிசோதகர் ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டனர்

அத்துடன், பூகொடை காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி, மன்னார் காவல்துறை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த நிலையிலேயே, குறித்த காவல் நிலையப் பொறுப்பதிகாரி நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்படி, காவல்நிலைய அதிகாரிகள், குறித்த சம்பவம் தொடர்பில் சட்டத்திற்கு மாறாக செயற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்