பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் அறிக்கை இன்றைய தினம் கிடைக்க பெற்ற போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், பேலியாகொடை மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பேலியாகொடை நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் என்.எம்.விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.