2020.10.19 ஆம் திகதி தொடக்கம் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தின் மூலமும், அதே போன்று மாத்தறை, வவுனியா, கண்டி, குருணாகல் பிராந்திய அலுவலகங்கள் மூலமும் சகல சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்ட வண்ணம் மட்டுப்படுத்தப்பட சேவைகளை பெற்று கொள்பவர்களுக்காக வழங்கப்பட்டு வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய கீழ் காட்டப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அல்லது இணைத்தளத்திற்கு பிரேவேசித்து தமக்குரிய சேவைகளை பெற்று கொற்வதற்காக, திகதியொன்றை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என்பதுடன், இவ்வாறு திகதியொன்றை ஒதுக்கிக் கொள்ளாது சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வருகை தருவோருக்கு அலுவலக வளாகத்தினுள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
தற்சமயம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் இவ் வேளையில் அலுவலகங்களுக்கு வருவவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.