2ஆம் நிலை கொரோனா தொற்றாளராக சஜித் – சுகாதார அமைச்சர்!

23232
23232

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச யால தேசிய வனத்தில் விடுதியொன்றில் இருந்த வேளையில் அதே விடுதியில் வேறொரு நபருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும் குறித்த தொற்று நோயாளருடன் தொடர்புபட்ட இரண்டாம் நிலை தொற்றாளராக எதிர்க்கட்சி தலைவர் அடையாளம் காணப்பட்டார் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சபையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (21) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடனான வாக்குவாதத்தின் போதே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை வெளிப்படுத்தினார்.

இதற்கு பதில் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சுகாதார அதிகாரிகள் கூறிய அறிவுரைகளை முழுமையான நான் கடைபிடித்தேன் என தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.