யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் யாழ்ப்பாண காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான திருடப்பட்ட 20 பவுண் நகைகள் ,3 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட மின் மோட்டர்கள் ,மற்றும் பல்வேறுபட்ட வீட்டுத் தளவாடங்களும் காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.