கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள களுபோவில போதனா வைத்தியசாலை ஊழியர்!

களுபோவில போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி பணியாற்றிய குறித்த ஊழியருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பணியாளர் தெஹிவளையை வசிப்பிடமாக கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான ஊழியருடன் பழகிய16 ஊழியர்களுக்கு பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.