மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு!

720x380 1
720x380 1

கொக்கட்டிச்சோலை முனாயக்காடு களப்பு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இன்று புதன்கிழமை (21.10.2020) அதிகாலை விசேட அதிரடிப்படையினரால் ரி 56 துப்பாக்கி மற்றும் 50 ரவைகள் மீட்கப்பட்டு கொக்கட்டிச்சோலை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வவுணதீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய மட்டக்களப்பு தளபதி உதவி காவல்துறை அத்தியட்சகர் நளின் பெரேராவின் ஆலோசனைக்கமைய வவுணதீவு விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி டபிள்யூ.ஜீ.எஸ்.காயப்பிரிகா தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் சம்பவதினமான இன்று புதன்கிழமை (21.10.2020) அதிகாலையில் குறித்த பகுதியில் உரைப்பை ஒன்றில் சுற்றப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் ரி.56 ரக துப்பாக்கி ஒன்றும் 2 மகசீன் மற்றும் 50 ரவைகளை மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளை கொக்கட்டிச்சோலை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.