வவுனியாவில் உள்ள பிரபல ஹாட்வெயார் உள்ளிட்ட மூன்று வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
வவுனியா வடக்கு பகுதியில் மாகா நிறுவனத்தில் இணைந்து வீதி திருத்தப் பணியில் ஈடுபட்ட மூவர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் அவர்கள் வந்து சென்ற வர்த்தக நிலையங்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி குறித்த கொரோனாத் தொற்றாளர்கள் வந்து சென்றனர் எனக் கருதப்படும் வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹாட்வெயார், பழைய பஸ் நிலையத்தில் உள்ள புத்தக விற்பனை நிலையம், ஹொரவத்பொத்தானை வீதியில் உள்ள ஹாட்வெயார் என மூன்று வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த தனியார் கம்பனியில் இணைந்து வீதி திருத்தப் பணியில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் தங்கியுள்ள இடங்களில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.