யாழில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் பொதுச்சந்தை வியாபாரிகள்

CvlzVVEVYAAqytV 720x380 1
CvlzVVEVYAAqytV 720x380 1

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட மருதனார் மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றையதினம் பிரதேச சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


மருதனார்மடம் பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சந்தைக் கட்டிட தொகுதியில் வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு சம்பந்தமாகவே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பிரதேச சபையினால் வழங்கப்பட இருக்கும் இடத்தின் அளவீடு தமது வியாபார நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு போதுமானதாக இல்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.