14 ஆவது கொரோனா மரணம் பதிவானது

download 4 4
download 4 4

கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவர்  கொரோனா தொற்று காரணமாக ஐ.டி.எச். வைத்திய சாலையில் சிகிச்சைபெற்று வந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று காரணமாக  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை நாட்டில் 6,028 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்க உள்ளாகியுள்ளனர்.

அத்துடன் மினுவாங்கொடை கொத்தணி பரவலின் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 2,558 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான 2,454  நோயாளிகள் நாடு முழுவதும் 23 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் நாட்டில் 3,561 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 341 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.