ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறிய 88 பேர் கைது!

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 88 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில் இதுவரை 691 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த 92 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன