தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை சாதாரணமாகக் கடந்துசெல்ல முடியாதென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அனைவரும் கொரோனா தொற்றுக்கு எதிரான சுகாதார பழக்கங்களை கடைப்பிடிப்பதுடன், தமது ஆரோக்கியம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.