தற்காலிகமாக மூடப்பட்டது பேருவலை துறைமுகம்!

download 5 3
download 5 3

கொரோனா தொற்றாளர்கள் 10 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்த பேருவலை துறைமுகத்தினை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருவலை துறைமுகத்தில் இருந்து பேலியகொடை மீன்சந்தை வரை சென்ற சிற்றுந்து ஒன்றின் சாரதிக்கும் அவருடன் தொடர்பை பேணியவர்களுக்குமே இவ்வாறு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த துறைமுகத்திற்கு அண்மித்த பகுதியை சேர்நத 100 பேரிடம் பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.