20ஆவது திருத்தம் நிறைவேற்றம்; வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாட்டம்

20ஆவது அரசியலமைப்பு சீர்சிருத்தம் பெரும்பாண்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது.

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் 91மேலதிக வாக்குகளை பெற்று, பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் 20ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதனையடுத்து வவுனியா நகரில் ஒன்றுகூடிய பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள், வெடிகளை கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.