நாட்டின் இராணுவதளபதிக்கு எதிராக விதித்துள்ள தடைகளை நீக்கவேண்டும் என அரசாங்கம் அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என எதிர்க்கட்சிதலைவர் சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு அடுத்தவாரம் விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் அரசாங்கம் இந்த வேண்டுகோளை விடுக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர்கேட்டுக்கொண்டுள்ளார்
வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன மைக்பொம்பியோவை சந்திக்கும்போது இது குறித்த வேண்டுகோளை விடுக்கவேண்டும் என சஜித்பிரேமதாச கோரியுள்ளதாகஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.