அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்க இராணுவ அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்றே புதன்கிழமை இலங்கைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டோஹாவிலிருந்து இலங்கை வந்த கட்டார் எயார்லைன்ஸ் விமானத்தில் 16 இராணுவ அதிகாரிகள் வந்துள்ளனர்.
அவர்கள் ஒரு நாள் தனிமைப்படுத்தலிற்கு உட்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.