சஹ்ரானின் மனைவி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

presidential
presidential

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இரண்டாவது நாளாக இன்றும் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய அவர் இன்று ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

இதேவேளை சஹ்ரான் ஹாசிமின் மனைவி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக நேற்று முதற்தடவையாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சஹ்ரான் ஹாசிமின் மனைவி உட்பட ஆறு பேர் கடந்த 18 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.