வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான காலக்கெடுவைத் தவறவிடவேண்டாம் – ஐங்கரநேசன் வேண்டுகோள்

வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான இந்தக் காலக்கெடுவை, எவரும் தவறவிடவேண்டாம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேருநர் இடாப்பில் பெயர்கள் பதியப்படவேண்டிய அவசியம் குறித்துத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல்கள் ஆணையகத்தால் 2020 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பைத் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன. இதன் முதற்கட்டமாக கிராம சேவையாளர்களின் ஊடாக ஆட்களைக் கணக்கெடுக்கும் படிவங்கள் (Body Count – BC forms) விநியோகிக்கப்பட்டு பதிவுகள் பெறப்பட்டுள்ளன.

எனினும், இப் படிவங்களைப் பூர்த்தி செய்து கையளிக்காதவர்கள் இன்னும் இருப்பதால், இம்மாதம் 29ஆம் திகதிவரையில் அவர்களுக்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ் – மாவட்டத் தேர்தல்கள் அலுவலகம் அறியத்தந்துள்ளது.

அந்த அறிக்கையின் முழு வடிவம்;