விக்னேஸ்வரனுக்கு தொலைபேசியூடாக வாழ்த்துத் தெரிவித்த பிரதமர்!

81 ஆவது பிறந்த தினத்தை இன்று (23) கொண்டாடும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இன்று (23) நண்பகல் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இதன்போது இருவரும் பொதுவான விடயங்களையிட்டுப் பேசிக்கொண்டபோதிலும், அரசியல் விவகாரங்கள் பேசப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

“பொதுமக்கள் தொடர்பாடலில் இலங்கையில் நீங்கள்தான் முதலாவது இடத்தில் இருக்கின்றீர்கள்” என விக்னேஸ்வரன் இதன்போது பிரதமரிடம் தெரிவித்திருக்கின்றார்.