தமிழ் முற்போக்கு கூட்டணி மேற்கொண்டிருந்த தீர்மானத்தை மீறி, 20ம் திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து வாக்களித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்த்குமார் தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அவரை கூட்டணியில் இருந்து இடைநிறுத்த அதன் தலைவர் மனோகணேசன் தீர்மானித்திருந்த நிலையில், அந்த தீர்மானத்தை இன்று பிற்பகல் ஒன்று கூடிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்றக் குழு ஏகமனதாக அங்கீகரித்தது.