வெளியேற்றப்பட்டார் முஷாரப் !

unnamed 6 3
unnamed 6 3

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலிருந்து, ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினரும்ஊடகவியலாளருமான முஷாரப் வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நாடாளுமன்றஉறுப்பினர்முஷாரப் கலந்து கொண்டார். எனினும், “20” ஆவது திருத்தத்தின் 17ஆவது பிரிவுக்கு ஆதரவாக வாக்களித்த முஷாரப்பை வெளியேற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் . வலியுறுத்தினார்.

இதற்கு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கினர். இதனை தொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினரும்ஊடகவியலாளருமான முஷாரப்குறித்த கூட் டத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது .