அம்பாறையில் உள்ளூர் துப்பாக்கியுடன் 5 பேர் கைது!

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் துப்பாக்கிகளுடன் 5 பேரை திருக்கோவில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

திருக்கோவில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய திருக்கோவில் காவல்துறை பொறுப்பதிகாரி ஜெயவீரா தலைமையிலான திருக்கோவில் காவல்துறையினர் விநாயகபுரம், திருக்கோவில், தம்பிலுவில் காஞ்சாரம்குடா பிரதேசத்தில் உள்ள வீடுகளை சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.

இதன்போது மறைத்து வைக்கப்பட்ட உள்ளூர் தயாரிப்பான 5 சட்டவிரோத துப்பாக்கிகளை மீட்டதுடன் 5 பேரை கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.