முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியம் ஒன்றை வழங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் இடம்பெற்றன. மூன்று கிறித்தேவாலயங்கள் , மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் குண்டுவெடிப்புசம்பவம் இடம்பெற்றிருந்தது.
இத்தாக்குதல்களில் ஒன்பது தற்கொலைதாரிகள் ஈடுபட்டதாகவும் இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும், தேசிய தவ்கீத் ஜமாத் என்ற உள்ளூர் அடிப்படைவாத இஸ்லாமியஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் அரசு அறிவித்தது
இது தொடர்பில் பலதடவைகள் சாட்சியம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மீண்டும் இன்றயதினம் சாட்சியம் ஒன்றை வழங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .