திருகோணமலை மத்திய மீன் சந்தையை மூடத் தீர்மானம்!

திருகோணமலை மத்திய மீன் சந்தையில் ஆறு பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த மீன் சந்தை முழுமையாக மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.