20வது அரசியலமைப்பு திருத்த சட்ட மூல வரைபினை விரைவில் அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் பொது செயலாளர் வெதகம தம்மானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசம் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த 22.10.2020( வியாழக்கிழமை)20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் 91 மேலதிக வாக்குகளை பெற்று பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.