பொருளாதார மேம்பாட்டு தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு – பஷில் ராஜபக்க்ஷ

குடும்பங்களுக்கான பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் குறித்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களது உதவியுடன் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஜனாதிபதி பணிக்குழுவின் செயலாளர் பஷில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்றைய (23) தினம் பிரதமர் அலுவலகத்தில் பஷில் ராஜபக்க்ஷ தலைமையின் கீழ் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வீட்டுப் பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு ஆகியவற்றினூடாக உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்களின் வாழ்க்கைச் செலவுகளைக் குறைப்பதற்கு இந்த தேசிய வேலைத்திட்டம் உதவுவதாக பஷில் ராஜபக்க்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அரச அலுவலகங்களுடன் இணைந்து நாட்டிலுள்ள 25 மாவட்டங்களை உள்ளடக்கியதாக இந்த தேசிய வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.