நிலவும் கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 29 பேர் நாடு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கட்டார் மற்றும் டோஹாவில் இருந்து 29 பேர் இன்று (24) நாடு திரும்பியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு விமான நிலைய வளாகத்திற்குள் பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக இலங்கையர்களை திருப்பி அனுப்புவதை தற்காலிகமாக தாமதப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.