நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பிரதான ரயில் சேவைகள் சிலவற்றை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையி நிலையங்களில் இருந்து பயணிக்கும் சிலாபம், பொல்காவெல, ரம்புக்கன, அலுத்கம, அவிசாவெல மற்றும் கொஸ்கம ஆகிய பகுதிகளுக்கான ரயில் சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்பட மாட்டாது என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.