இலங்கையில் மேலும் 75 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் முன்னதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என்பது தெரியந்துள்ளது.
மினுவங்கொடை கொரோனா கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3958 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.