புதிய அரசியலமைப்புக்கான பொதுமக்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பம் !

c7f4108d 22ef073a 20 th amenment 850 850x460 acf cropped
c7f4108d 22ef073a 20 th amenment 850 850x460 acf cropped

நிறைவேற்ற பட்டுள்ள புதிய அரசியலமைப்பிற்கான பொதுமக்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக தமது பரிந்துரைகளை பொதுமக்கள் முன்வைக்க முடியும் என நீதி அமைச்சின் செயலாளர் எம்.பி.கே. மாயாதுன்னே முன்னர் அறிவித்திருந்தார்.

இதற்கமைவாக இது தொடர்பாக நாட்டின் பிரஜை ஒருவர் தமது ஆலோசனைகள் அல்லது கருத்துக்களை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் எந்த ஒரு மொழியிலாவது அனுப்ப முடியும்.

அவற்றினை 2020 நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் செயலாளர், நிபுணர்கள் குழு, இலக்கம்-32, தொகுதி 02, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் கொழும்பு 7 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.அல்லது expertscommpublic@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்எனவும் என நீதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .